Friday, 29 April 2016

முருகன் கணபதியை கனவில் காண சுப மந்திரம்

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.

சரீரமெனுங் கட்டையிலிருந்து சாகா ஆவிபறப்பதற்குள், சொக்கனின் பிள்ளைகளை சொற்பனத்திலாவது காண்போம்.


சுபமந்திரம்

ஹரி ஓம் குருவே ஆமெனு மெழுத்தை அறிவித்தகுருவே வருக
ஆதி விநாயகா ஆணை மாமுகனே பானை வயிரா 
பாசாங் குசதாரா பாலன் முன் வருக 
ஓம்சக்தி முருகா சடாட்சர முருகா 
சரவணத்தில் பிறந்த சதுரகிரி முருகா சடுதியில் வருக 
தெய்வ யானைப்பாகா தேவிவள்ளியின் நாயகா 
சித்ரமயில் வாகனா சித்தர் போகம்
சிறையிலிட்டுப் பிரம்மனை சித்தங்கலக்கிய சத்ரு சம்ஹாரா 
தந்தையின் செவியில் மந்திரமோதிய செந்தூர் சிவசுப்ரமண்ய தேவா வருகவருக ஸ்வாஹ : 

என்று அனுதினம் ஸ்நானம் செய்து ஜபிப்போம்.

No comments:

Post a Comment