Saturday 17 September 2016

சக்தியின் சுபமந்திரம் அனைத்து இடர்பாடுகள் நீங்க, மனோதிடம் உருவாக

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம். 

  இப்பக்கத்தில் பதிவாகும் சுபமந்திரங்களை பின்பற்ற நினைக்கும் சகோதரர்கள். சகோதரிகள் பிறருக்கு துன்பம் விளைவிக்கும் குணமுடையவர்களாக இருந்தால், சத்தியமாக இது போன்றவர்களுக்கு சுபமந்திரம், பலன் தராது என்பது உறுதி. 



  எமக்கேற்பட்ட துன்பங்கள், ரொணச் சல்லியங்களில் அகப்பட்டு, சோர்ந்து போகுந்தருணத்தில் எமக்குத் தன்னம்பிக்கையும், மனோதிடத்தையுங் கொடுத்து, அந்த இடர்பாடுகளிலிருந்து விடுவித்து, மன நிம்மதியைத் தந்த சக்தியின் சுப மூலமந்திரத்தை இரு வேளையும் 108 உரு, நூறு நாள் முழு நம்பிக்கையுடன் ஜபித்து வந்தோமானால் அதன் பலனை அடையலாம். 

மூலமந்திரம்

ஓம் நமோ பஹவதி
 ஆதிமூலத்தி ஆனந்தாயி, 
வீரவல்லி விஜயலக்ஷ்மி 
எம் தீவினையறுப்பாய் 
பார்வதி மஹேச 
பரந்த சாம்பவி 
எமை காத்தருளுவாய் 
ஐயுங், கிலியும், 
சௌவும், றீயும், 
ஸ்ரீயும் ஸ்வாஹ:

என்று ஜபிக்க வேண்டும்.