Saturday 14 May 2016

கால பைரவர் தியான சுப மந்திரம்

" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "




இஃது காலபைரவத் தியானம், இம் மந்திர சித்தியின் பலன். நாம் சற்குணவான்களாக இருந்து, நாம் வாழ்க்கையைக கண்டு பொறாமையின் பேரில், ஏவல் பில்லி, சூன்யம் செய்து விடுவார்கள். இதன் மூலமாக நமக்கு பலவிதமான வகைகளில் மீளாத் துயரத்தில் அகப்பட்டுவிடலாம், (அகப்படாமலிருக்கவும்) இத் தியான மந்திரத்தை அனுதினமும் இருவேளை ஸ்நானம் செய்து, பத்து முறை த்யான மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து நெய்தீபமேற்றி வினாயகப் பெருமானைத் தியானஞ் செய்து. பின் இத்தியான மந்திரத்தை உச்சரிக்கவும். 

சுப மந்திரம்

ஓம் பைரவா உத்தண்ட பைரவா கால பைரவா கங்காள பைரவா திரிபுரானந்த பைரவா அண்ட பைரவா அண்டரண்ட பைரவா கபாலமேந்திய பைரவா எனையெதிர்த்த சத்துருக்கள் பேரிலே நட கால்களில் பாதக்குறடு கலீர் கலீரென வடைமாலை யணிந்து கொண்டு சுவான வாகனத்தின் பேரிலேறி வருவாய் பிள்ளையைத் தின்னும் பெரும்பாவிகளையும் அடித்து ஒடித்து வாவா பைரவா கைலாயம் காவல்போல் என் சிந்தையிற் காவலாயிருந்து காக்க உன்னையும் என்னையும் படைத்தவனின் ஆணை சுவாஹ. 

எவருக்குந் தீங்கு நினையாமல், பிறரால் துன்பத்திற்கு ஆளாகி (ஆளாக) இருப்பவர்களுக்கு மட்டுமே காலபைரவர் அபயகரம் நீட்டுவார்.

1 comment:

  1. Thank u very much for this effective mantra.I feed dogs.But I meet problems with my neighbours doing blackmagic. Today I ce across this website. Very useful. Tq. Om Bairava


    ReplyDelete