" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "
சொர்ண வயிரவர் மந்திரம்
இம் மூலமந்திரத்தை உச்சாடனம் சித்திசெய்தோமானால் மூட்டை மூட்டையார் குடும்பத்தில் சொர்ணங்கள் குவியும் என்று நினைப்போர்கள் தயவு செய்து இம் மந்திரத்தை சித்தி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். பின் இம்மந்திர சித்தியினால் என்ன பயன் என்று கேட்போர்களுக்கு, வாழ்க்கையின் தரித்திராம்சம் நீங்கி உண்ணும் உணவுக்கும், உடுத்தும் உடைக்கும், பஞ்சம் வாராமலும், பிறர் கையை எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு லட்சுமி கடாட்சத்தையும் அருளுவார் சொர்ண வயிரவர். வசதிப்பெற்றவர்கள் விக்கிரஹ வழிபாடு (5 அங்குலம்) வாங்கி, வீட்டிலேயே அபிஷேக பூஜை செய்து வழிபடலாம், நடுத்தர வர்க்கத்தை உள்ளவர்கள் யந்திர பிரதிஷ்டை செய்து வழிபடலாம். ஏழ்மையில் உள்ளோர் சிவாலயம் சென்று, வயிரவருக்கு வடைமாலை சாற்றி, மேற்கண்ட மூவகையினரும் அனுதினம் கீழ்வரும் மூலமந்திரத்தை 108 முறை உச்சரித்து வரலாம். நூறு நாள் வழிபட்டு வர வறுமைகள் நீங்கி சுபீட்சம் உண்டாகும்.
சுப மூலமந்திரம்
ஹரி ஓம் றீங் நவகோடி சொர்ண வயிரவா வாவா
ஐயுங் கிலியும் சௌவும்
சதாகாலமும் என்னுடனிருந்து அருள் செய் சுவாஹ.
இஃது தன்னலமும் பிறர்நலமும் கருதுபவர்களுக்கு மட்டுமே சித்திக்கும். வளர்பிறை அஷ்டமியில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். காரணம் சகல சுப அபிவிருத்திக்குண்டானது சொர்ண வயிரவர் மந்திரம்.