Monday 30 May 2016

சொர்ண வயிரவர் சுப மந்திரம்

" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "

சொர்ண வயிரவர் மந்திரம்


   இம் மூலமந்திரத்தை உச்சாடனம் சித்திசெய்தோமானால் மூட்டை மூட்டையார் குடும்பத்தில் சொர்ணங்கள் குவியும் என்று நினைப்போர்கள் தயவு செய்து இம் மந்திரத்தை சித்தி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். பின் இம்மந்திர சித்தியினால் என்ன பயன் என்று கேட்போர்களுக்கு, வாழ்க்கையின் தரித்திராம்சம் நீங்கி உண்ணும் உணவுக்கும், உடுத்தும் உடைக்கும், பஞ்சம் வாராமலும், பிறர் கையை எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யும் அளவிற்கு லட்சுமி கடாட்சத்தையும் அருளுவார் சொர்ண வயிரவர். வசதிப்பெற்றவர்கள் விக்கிரஹ வழிபாடு (5 அங்குலம்) வாங்கி, வீட்டிலேயே அபிஷேக பூஜை செய்து வழிபடலாம், நடுத்தர வர்க்கத்தை உள்ளவர்கள் யந்திர பிரதிஷ்டை செய்து வழிபடலாம். ஏழ்மையில் உள்ளோர் சிவாலயம் சென்று, வயிரவருக்கு வடைமாலை சாற்றி, மேற்கண்ட மூவகையினரும் அனுதினம் கீழ்வரும் மூலமந்திரத்தை 108 முறை உச்சரித்து வரலாம். நூறு நாள் வழிபட்டு வர வறுமைகள் நீங்கி சுபீட்சம் உண்டாகும். 

சுப மூலமந்திரம்

ஹரி ஓம் றீங் நவகோடி சொர்ண வயிரவா வாவா 
ஐயுங் கிலியும் சௌவும் 
சதாகாலமும் என்னுடனிருந்து அருள் செய் சுவாஹ. 

   இஃது தன்னலமும் பிறர்நலமும் கருதுபவர்களுக்கு மட்டுமே சித்திக்கும். வளர்பிறை அஷ்டமியில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். காரணம் சகல சுப அபிவிருத்திக்குண்டானது சொர்ண வயிரவர் மந்திரம்.

Saturday 14 May 2016

கால பைரவர் தியான சுப மந்திரம்

" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "




இஃது காலபைரவத் தியானம், இம் மந்திர சித்தியின் பலன். நாம் சற்குணவான்களாக இருந்து, நாம் வாழ்க்கையைக கண்டு பொறாமையின் பேரில், ஏவல் பில்லி, சூன்யம் செய்து விடுவார்கள். இதன் மூலமாக நமக்கு பலவிதமான வகைகளில் மீளாத் துயரத்தில் அகப்பட்டுவிடலாம், (அகப்படாமலிருக்கவும்) இத் தியான மந்திரத்தை அனுதினமும் இருவேளை ஸ்நானம் செய்து, பத்து முறை த்யான மந்திரத்தை பூஜை அறையில் அமர்ந்து நெய்தீபமேற்றி வினாயகப் பெருமானைத் தியானஞ் செய்து. பின் இத்தியான மந்திரத்தை உச்சரிக்கவும். 

சுப மந்திரம்

ஓம் பைரவா உத்தண்ட பைரவா கால பைரவா கங்காள பைரவா திரிபுரானந்த பைரவா அண்ட பைரவா அண்டரண்ட பைரவா கபாலமேந்திய பைரவா எனையெதிர்த்த சத்துருக்கள் பேரிலே நட கால்களில் பாதக்குறடு கலீர் கலீரென வடைமாலை யணிந்து கொண்டு சுவான வாகனத்தின் பேரிலேறி வருவாய் பிள்ளையைத் தின்னும் பெரும்பாவிகளையும் அடித்து ஒடித்து வாவா பைரவா கைலாயம் காவல்போல் என் சிந்தையிற் காவலாயிருந்து காக்க உன்னையும் என்னையும் படைத்தவனின் ஆணை சுவாஹ. 

எவருக்குந் தீங்கு நினையாமல், பிறரால் துன்பத்திற்கு ஆளாகி (ஆளாக) இருப்பவர்களுக்கு மட்டுமே காலபைரவர் அபயகரம் நீட்டுவார்.

Wednesday 11 May 2016

மனோ சக்தியின் வேகம் - பகைவர்களை வெல்ல இருட்டறை அப்பியாசம்

" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "


கீழ்வரும் சுபமந்திரத்தை அனுதினமும்"இருட்டறையில்" 1 மணி நேரம் உச்சரிக்க வேண்டும். இதனால் நமக்கேற்படும் "நற்பயனும் பலனும்"மனம் ஒரு நிலைப்படும். துயரங்களேற்பட்டாலும் ஒரு சிலமணி நேரங்கள்தான்நீடிக்கும். அடுத்த மணி நேரத்திற்குள் அத்துயரங்களை துரத்தி மனதுக்கு சாந்த நிலையைத் தருவது மட்டுமல்லாமல், நமக்கேற்பட்ட ஏற்படவிருக்கின்ற பகையாளிகள், நம்மையெதிர்த்து நமக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். எப்படி? இச் சுபமந்திரத்தை சித்தி செய்வதின் மூலமே ! நமக்கு இன்னார் தான் பகையாளிகள் என்றறிந்தால்,அவர்களை நேருக்குநேர் அவர் கண்களை உற்று நோக்கி கலந்துரையாடல் செய்தோமானால், அவர் உயிர்காப்பான் தோழனாக மாறிவிடுவார்கள். வீம்பான பகையாளிகளை நட்புறவுக் கொள்ள பயன்கொள்ள வேண்டாம். நம்மோடு நகமும் சதையுமாக பலகாலம் உறவோடிருந்து, வேண்டாதவர்கள் செய்த கலகத்தினால் பகைப் பெற்று பிரிந்தார்களே! அவர்களுக்காப் பயன்படுத்தி, அவர்கள் மீண்டும் நட்பானதும் பகைக்கான காரணத்தை விளக்கிச் சொன்னால் எடுத்துக் கொள்வார்கள். இச்சுபமந்திரம் சித்தியாக "இருட்டறை அப்பியாசம்" என்று பெயர். இச்சுபமந்திரத்தை உச்சரித்து ஜெபிக்க எண்ணிக்கையோ, காலஅளவோ கிடையாது. ஜெபம், அனுதினமும் செய்ய செய்ய, ஒரு சிறு ஒளி நம் கண்முன்னே தோன்றும் வரை செய்ய வேண்டும். 

சுபமந்திரம்

ஓம்சக்தி உலகசக்தி ஆதிசக்தி ஆக்ஞாசக்தி 
சிவசக்தி சித்தசக்தி வாக்குசக்தி வசியசக்தி
எண்ணிய எண்ணம் எண்ணிய படியே என்னைப் பகைத்தோர் 
எனக்குற வாகவே என்னை நினைத்தோர் என்வசமாகவே இசைந்துநடக்க நானே நீயாய் நீயே செய்செய்

குறிப்பு: கீழ்த்தரமான தகாத எண்ணங்கொண்டு இச்சுபமந்திரத்தைப் பிரயோகிக்க எண்ணுபவர்கள், சித்தர்கள், ரிஷிகள், ஞானிகளின் சாபத்திற்காளாக நேரிடும் என்று மனதில் நினைவுக் கொள்ள வேண்டும்.