" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "
கீழ்வரும் சுபமந்திரத்தை அனுதினமும்"இருட்டறையில்" 1 மணி நேரம் உச்சரிக்க வேண்டும். இதனால் நமக்கேற்படும் "நற்பயனும் பலனும்"மனம் ஒரு நிலைப்படும். துயரங்களேற்பட்டாலும் ஒரு சிலமணி நேரங்கள்தான்நீடிக்கும். அடுத்த மணி நேரத்திற்குள் அத்துயரங்களை துரத்தி மனதுக்கு சாந்த நிலையைத் தருவது மட்டுமல்லாமல், நமக்கேற்பட்ட ஏற்படவிருக்கின்ற பகையாளிகள், நம்மையெதிர்த்து நமக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். எப்படி? இச் சுபமந்திரத்தை சித்தி செய்வதின் மூலமே ! நமக்கு இன்னார் தான் பகையாளிகள் என்றறிந்தால்,அவர்களை நேருக்குநேர் அவர் கண்களை உற்று நோக்கி கலந்துரையாடல் செய்தோமானால், அவர் உயிர்காப்பான் தோழனாக மாறிவிடுவார்கள். வீம்பான பகையாளிகளை நட்புறவுக் கொள்ள பயன்கொள்ள வேண்டாம். நம்மோடு நகமும் சதையுமாக பலகாலம் உறவோடிருந்து, வேண்டாதவர்கள் செய்த கலகத்தினால் பகைப் பெற்று பிரிந்தார்களே! அவர்களுக்காப் பயன்படுத்தி, அவர்கள் மீண்டும் நட்பானதும் பகைக்கான காரணத்தை விளக்கிச் சொன்னால் எடுத்துக் கொள்வார்கள். இச்சுபமந்திரம் சித்தியாக "இருட்டறை அப்பியாசம்" என்று பெயர். இச்சுபமந்திரத்தை உச்சரித்து ஜெபிக்க எண்ணிக்கையோ, காலஅளவோ கிடையாது. ஜெபம், அனுதினமும் செய்ய செய்ய, ஒரு சிறு ஒளி நம் கண்முன்னே தோன்றும் வரை செய்ய வேண்டும்.
ஓம்சக்தி உலகசக்தி ஆதிசக்தி ஆக்ஞாசக்தி
சுபமந்திரம்
ஓம்சக்தி உலகசக்தி ஆதிசக்தி ஆக்ஞாசக்தி
சிவசக்தி சித்தசக்தி வாக்குசக்தி வசியசக்தி
எண்ணிய எண்ணம் எண்ணிய படியே என்னைப் பகைத்தோர்
எனக்குற வாகவே என்னை நினைத்தோர் என்வசமாகவே இசைந்துநடக்க நானே நீயாய் நீயே செய்செய்
குறிப்பு: கீழ்த்தரமான தகாத எண்ணங்கொண்டு இச்சுபமந்திரத்தைப் பிரயோகிக்க எண்ணுபவர்கள், சித்தர்கள், ரிஷிகள், ஞானிகளின் சாபத்திற்காளாக நேரிடும் என்று மனதில் நினைவுக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment