Thursday 26 July 2018

வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றம் செய்வோர்களிடமிருந்து பணத்தை பெற வேண்டி ஸ்ரீவயிரவர் வழிபாடு

" அருள்தரும் ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "



#ஓம் ஸ்ரீ #வயிரவர் தீபவழிபாடு முறையும், #மூலமந்திரமும்

தக்க சமயத்தில் பணஉதவி செய்து அப்பண உதவிப் பெற்றவர்கள். கொடுத்தவர்கள் கேட்டும். வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றம் செய்வோர்களிடமிருந்து பணத்தை பெற வேண்டி.

தேய்பிறை அஷ்டமி நாளில் எம்பெருமான் ஈசன் ஆலயத்தில் எழுந்தருளி அருள்புரியும் ஸ்ரீவயிரவர் ஆலயத்தில்.

தான் வடக்கு முகமாக அமர்ந்து ஏழு நெய்தீபம் இரட்டைத்திரியிட்டு ஏற்றி வைத்து, ஈசனை மனத்தியானம் செய்து, ஐயனே உதவிக்கேட்டு கொடுத்த பணம் அதை வாங்கியவர் ( அவரது தாயாரின் பெயர் அவரது பெயரைச்சொல்லி ) கொடுக்க மனமில்லாமல் அலைகழிக்கின்றார்.

அப்பணம் என் கைவந்து சேர அருள் புரிய வேண்டுமய்யனே என த்யானித்து,

கீழ்வரும் மூலமந்திரத்தை இருபத்தேழு முறை மானதமாக உச்சரித்து வர வேண்டும்.

#மூலமந்திரம்

ஹரி ஓம் றீங் நவகோடி
சொர்ண வயிரவா வாவா
ஓம் ஐயும் கிலியும் சௌவும்
சதாகாலமும் எனக்கருள் புரிய வாவா
ஓம் ஹ்ரீம் பம் வயிரவராய நமஹ :

மூன்று தேய் பிறை அஷ்டமி நாளில் உதவிக்காக பணம் வாங்கியவர்கள் சிறிது சிறிதாகவாவது கொடுத்து விடுவார்கள்.

#குறிப்பு:

வட்டிக்கு கொடுத்தோர்களும் அசலுக்கு அதிகமாக வட்டியை வசூலித்தவர்களுக்கும்,  இவ்வயிரவர் வழிபாடு பயனளிக்காது.

No comments:

Post a Comment