Thursday 26 July 2018

வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றம் செய்வோர்களிடமிருந்து பணத்தை பெற வேண்டி ஸ்ரீவயிரவர் வழிபாடு

" அருள்தரும் ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "



#ஓம் ஸ்ரீ #வயிரவர் தீபவழிபாடு முறையும், #மூலமந்திரமும்

தக்க சமயத்தில் பணஉதவி செய்து அப்பண உதவிப் பெற்றவர்கள். கொடுத்தவர்கள் கேட்டும். வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றம் செய்வோர்களிடமிருந்து பணத்தை பெற வேண்டி.

தேய்பிறை அஷ்டமி நாளில் எம்பெருமான் ஈசன் ஆலயத்தில் எழுந்தருளி அருள்புரியும் ஸ்ரீவயிரவர் ஆலயத்தில்.

தான் வடக்கு முகமாக அமர்ந்து ஏழு நெய்தீபம் இரட்டைத்திரியிட்டு ஏற்றி வைத்து, ஈசனை மனத்தியானம் செய்து, ஐயனே உதவிக்கேட்டு கொடுத்த பணம் அதை வாங்கியவர் ( அவரது தாயாரின் பெயர் அவரது பெயரைச்சொல்லி ) கொடுக்க மனமில்லாமல் அலைகழிக்கின்றார்.

அப்பணம் என் கைவந்து சேர அருள் புரிய வேண்டுமய்யனே என த்யானித்து,

கீழ்வரும் மூலமந்திரத்தை இருபத்தேழு முறை மானதமாக உச்சரித்து வர வேண்டும்.

#மூலமந்திரம்

ஹரி ஓம் றீங் நவகோடி
சொர்ண வயிரவா வாவா
ஓம் ஐயும் கிலியும் சௌவும்
சதாகாலமும் எனக்கருள் புரிய வாவா
ஓம் ஹ்ரீம் பம் வயிரவராய நமஹ :

மூன்று தேய் பிறை அஷ்டமி நாளில் உதவிக்காக பணம் வாங்கியவர்கள் சிறிது சிறிதாகவாவது கொடுத்து விடுவார்கள்.

#குறிப்பு:

வட்டிக்கு கொடுத்தோர்களும் அசலுக்கு அதிகமாக வட்டியை வசூலித்தவர்களுக்கும்,  இவ்வயிரவர் வழிபாடு பயனளிக்காது.

Saturday 17 September 2016

சக்தியின் சுபமந்திரம் அனைத்து இடர்பாடுகள் நீங்க, மனோதிடம் உருவாக

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம். 

  இப்பக்கத்தில் பதிவாகும் சுபமந்திரங்களை பின்பற்ற நினைக்கும் சகோதரர்கள். சகோதரிகள் பிறருக்கு துன்பம் விளைவிக்கும் குணமுடையவர்களாக இருந்தால், சத்தியமாக இது போன்றவர்களுக்கு சுபமந்திரம், பலன் தராது என்பது உறுதி. 



  எமக்கேற்பட்ட துன்பங்கள், ரொணச் சல்லியங்களில் அகப்பட்டு, சோர்ந்து போகுந்தருணத்தில் எமக்குத் தன்னம்பிக்கையும், மனோதிடத்தையுங் கொடுத்து, அந்த இடர்பாடுகளிலிருந்து விடுவித்து, மன நிம்மதியைத் தந்த சக்தியின் சுப மூலமந்திரத்தை இரு வேளையும் 108 உரு, நூறு நாள் முழு நம்பிக்கையுடன் ஜபித்து வந்தோமானால் அதன் பலனை அடையலாம். 

மூலமந்திரம்

ஓம் நமோ பஹவதி
 ஆதிமூலத்தி ஆனந்தாயி, 
வீரவல்லி விஜயலக்ஷ்மி 
எம் தீவினையறுப்பாய் 
பார்வதி மஹேச 
பரந்த சாம்பவி 
எமை காத்தருளுவாய் 
ஐயுங், கிலியும், 
சௌவும், றீயும், 
ஸ்ரீயும் ஸ்வாஹ:

என்று ஜபிக்க வேண்டும்.

Monday 11 July 2016

பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க

" ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "






கிராமத்திலாகட்டும் நகரத்திலாகட்டும். நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் வீட்டில் " காமதேனுவாகவும், மஹாலட்சுமியாகவும் " போற்றி வழிபட்டு வளர்த்து வருவார்கள் " பசுவை " அம்மனின் கிருபையால் அதை பராமரித்து வருபவர்களுக்கு பசுவின் மடிபெருத்து, பாலானது பெருகி,வளர்ப்போரின் வாழ்வில் தனசம்பத்து பெருகும். அப்போது மனம் பொருக்காத ஒரு சிலர் ஒன்று கூடி பேசிக்கொள்வார்கள். அந்தப் பசுவின் மடியைப்பாருடா ஒருநாளைக்கு குறஞ்சது இருபது லிட்டர் குறயாம பால் கொடுக்கின்றது. பிறகு ஏன் அவன் பணஞ்சேர்க்கமாட்டான். எம்பாங்க அந்த நேரமே அந்தப் பசுவிற்கு பலமான கண் அடி விழுந்திடும். அன்னயிலயிருந்து அந்தப்பசு இரண்டு லிட்டர் பால் கொடுப்பதே மிகசிரமமாகி விடும் (இது யான் அனுபவத்தில் கண்டது) பசு மாட்டிற்கே கண்திருஷ்டின்னா ! பார்த்துக்கோங்க. கீழ்வரும் சுபமந்திரத்த நாளொன்று நூறு உரு வீதம் நூறு நாளுக்கு , உரு கொடுத்து சித்தி செய்து கொண்டால், இது போன்ற கண்திருஷ்டியால் அவதியுறும் பசுக்களுக்கு. தோள்மீது போட்டுக்கொள்ளும் சுத்தமான பருத்தி துணியால் துண்டால், மந்திரத்தை 21 முறை காலை மாலை, இப்படியாக 9 நாள் மந்திரித்து பசுவின் நெற்றியில் விபூதியைத் தடவி. அதன் சரீரத்தின் மீதும் தடவி விட , கண்திருஷ்டி நீங்கி பழைய நிலையை விட. சற்று அதிகமாகவே பால் சுரக்கும். நம்புவர்களுக்கு மட்டுமே. 

மூலமந்திரம்

குன்றதிரப் புல்மேய்ந்து, குளமதிர நீர் குடித்து, மண்ணதிர மேய்ந்து வருகின்ற காராம்பசுவே, உன்னை உற்றுப்பார்த்தவன் கண்களிரண்டும், பாம்பு கண்போலே வெடிக்கவும், ஆனைக்கண்டால் பாலாய் சொரியவும், ஒம்காளி ஓம்பிடாரி ஓம்நமசிவய. 

என்று செபிக்கவும்.