Friday 29 April 2016

முருகன் கணபதியை கனவில் காண சுப மந்திரம்

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.

சரீரமெனுங் கட்டையிலிருந்து சாகா ஆவிபறப்பதற்குள், சொக்கனின் பிள்ளைகளை சொற்பனத்திலாவது காண்போம்.


சுபமந்திரம்

ஹரி ஓம் குருவே ஆமெனு மெழுத்தை அறிவித்தகுருவே வருக
ஆதி விநாயகா ஆணை மாமுகனே பானை வயிரா 
பாசாங் குசதாரா பாலன் முன் வருக 
ஓம்சக்தி முருகா சடாட்சர முருகா 
சரவணத்தில் பிறந்த சதுரகிரி முருகா சடுதியில் வருக 
தெய்வ யானைப்பாகா தேவிவள்ளியின் நாயகா 
சித்ரமயில் வாகனா சித்தர் போகம்
சிறையிலிட்டுப் பிரம்மனை சித்தங்கலக்கிய சத்ரு சம்ஹாரா 
தந்தையின் செவியில் மந்திரமோதிய செந்தூர் சிவசுப்ரமண்ய தேவா வருகவருக ஸ்வாஹ : 

என்று அனுதினம் ஸ்நானம் செய்து ஜபிப்போம்.

Tuesday 26 April 2016

குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் துஷ்ட சக்திகளில் இருந்து மீள சுபமந்திரம்

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.


நம் குழந்தைகள் பயந்து அழும், நாளுக்கு நாள் உடல் நலம் குன்றிடும். மற்றும் பெரியவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, துஷ்ட ஆவிகளால் அல்லல் உறுபவர்கள் மீண்டிட, இச் சுபமந்திரத்தை சித்தி செய்து கொண்டு, ஜலத்தை கையிலெடுத்து இம் மந்திரத்தை மும்முறை சொல்லி முகத்தைக் கழுவ பீடைகள் விட்டோடிடும்.

சித்தியாவதற்கு கீழ்வரும் மந்திரத்தை, வினாயகப் பெருமானை த்யானம் செய்ய வேண்டும்.

ஐங்கரத்தோனே எவ்வித இடையூறுமின்றி மந்திர சித்தி அருள துணைபுரியங்களென்று.

நாள் 1க்கு நூறு உரு துளசி மணி மாலையால் கொடுக்க வேண்டும் நூறு நாளைக்கு.
சுப மந்திரம்

ஹரிஓம் ஹரிஹரி ஆதிமூலமே 
ஆண்டவா வாவா, நரசிம்ம ரூபநாராயணா வாவா, 
துஷ்டரை துரத்தி இஷ்டரை காக்கும்
துளசிமார்பாயுனை துதித்தேன் நம ஓம் 

என்று உரு கொடுத்து சித்தியாக்கி பலன் பெறலாம். யாம் கைகண்டது பலனளித்தது.

Saturday 16 April 2016

துஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு சுப மந்திரம்

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை


நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும் சமயம், துஷ்ட சக்திகள் நம்மையோ நம் சந்ததிகளையோ ஆட்கொண்டு ஆட்டிபடைக்கும்.  அச்சமயங்களிலும் சரி, அவைகளனுகாதிருக்கவும், விடுதலைப் பெறுவதற்கும் உண்டான " உடற்கட்டு சுபமந்திரம் "  இம் மந்திரத்தை தாமும் தம் பிள்ளைகளும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு, விபூதி 1 சிட்டிக்கை எடுத்து கீழ்வரும் மந்திரத்தை மும்முறை சொல்லி நெற்றியில் அணிந்து கொண்டு படுக்கைக்கு சென்றால் மேற்கண்ட துஷ்ட சக்திகள் ஏணையோரையும் அணுகாது. 

சுபமந்திரம்

ஓம்சக்தி சிவசக்தி சாமுண்டிபரமேஸ்வரி 
ஐயுங்கிலியும் சௌவும் ஆகாயத்தைக் கட்டினேன், 
சௌவுங் கிலியும் ஐயும் பாதாளத்தைக் கட்டினேன், 
எட்டுதிசையும் பதினாறு கோணமும் ஈஸ்வரனைக் கொண்டு கட்டினேன், கண்ணுடன் சிரசைக் கணபதியால் கட்டினேன், கண்டமும் உடலும் கந்தசாமியால் கட்டினேன் 
மற்றவை துஷ்டவை மகாதேவனால் கட்டினேன் 
என் உடலையும் உயிரையும் உன் உயிராய் கட்டினேன் 
என்கட்டே கட்டு என்கட்டு உன் கட்டாக நிற்க சுவாஹ: 

என்று சொல்லவும். இதற்கு பூஜாவிதிமுறைகள் ஏதுமில்லை. ஸ்லோகங்கள் போலவே இதுவும்

Monday 11 April 2016

துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலக காலபைரவா் சுப மந்திர யந்திரம்

" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை "

துஷ்டதேவதைகள் இக்கலியில் உண்டென்று நம்பி, இப்பக்கத்தில் வரும் சுபமந்திரம் சுபயந்திரம் பதிவுகளை வாசித்து உள்வாங்கி பயனில் கொள்ளும் ஏனைய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் பற்றான இரவு வணக்கம். இதற்கு வெள்ளெருக்கன் நார். அல்லது 5 வர்ணநூல், (கருப்பு நூல் தவிர்த்து) சயார் செய்து வைத்திருக்க வேண்டும். சிறுபிள்ளைகளானாலும் சரி, பெரியவர்களானாலும் சரி, மேற்குறிப்பிட்ட தேவதைகளாலும், மற்றும் தோஷங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று ஸ்நானஞ்செய்து, பூஜை அறையில் அமர்ந்து, படத்திலுள்ள எந்திரத்தை, தாம்பாலத் தட்டில் விபூதியைப் பரப்பி அதில் எழுதி, அதன் மீது புஷ்பம் தூவி அத்தர் தெளித்து, அதன் எதிரில் வாழைஇலை வைத்து, கனிவர்க்கங்கள் வைத்து, தாம்பூலம், வாழைபழம் வைத்து நெய்தீபமேற்றி, தேங்காயுடைத்து வைத்து கற்பூர தீபராதனை செய்து. (நூல் அல்லது நாரில்) கீழ்வரும் பைரவ ஸ்தோத்திரத்தை ஒரு முறைச் சொல்லி விட்டு, பின் கீழ் வரும் மூலமந்திரத்தை 108 முறை உச்சரித்தவாறே முடிபோட வேண்டும். மூலமந்திரத்தை ஒரு முறை உச்சரித்து நூலில் (அ) நாரில் ஒரு முடிபோட வேண்டும். இது போல் உச்சரித்து 108 முடிச்சு போட்டுப் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் பெரியவர்கள் கழுத்தில் கட்ட மேற்குறிப்பிட்ட துஷ்ட சல்லியங்கள் தோஷங்கள் விலகும்.



 ஸ்தோத்திரம் : முதலில் இதை 1 முறை ஜபிக்கவும்

 தேவராஜ ஸேவ்யமான பாவனங்கிரி பங்கஜம் வியாளயக்ஞ க்ஷேத்ரபிந்து சேகரம் க்ருபாகரம் நாரதாதியோகி ப்ருந்தவந்திதம் திகம்பரம் காசிகா புராதிநாத காலபைரவ ஸம்பஜே. 

மூலமந்திரம் 108 முறை ஜபித்து முடிபோடவேண்டும்

ஓம் ஆம் பம் பம் பைரவா சர்வதோஷம் நசிமசி அம்தம் சுவாஹ:

இஃது இப்போதும் யான் கையாண்டு கையீட்டில்லாம லெல்லோர்க்கும் பாகுபாடில்லாமல் செய்து வருகின்றேன். 

Saturday 9 April 2016

குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய சுப மந்திரம்

ஏணையோருக்கும் பற்றுடன் வணக்கம்.



(இப்பதிவு விருப்பமுள்ள சகோதர சகோதரிகளுக்கு மட்டும்)
குழந்தைகளுக்கு தோஷந்தாங்கி பிணியினால் அவதியுறும், அச்சமயம் பொருளாதார வசதியில்லாத பெற்றோர்கள். குழந்தையைத் தர்க்காவிற்கு அதிகாலையில் கொண்டு செல்வார்கள். பள்ளி வாசலில் அதிகாலையில் வரிசையில் நிற்பார்கள். முஹம்மதிய பெரியோர்கள் வேதமோதிவிட்டு இறைவனை வணங்கி வழிபட்டு வெளிவரும் சமயம், இறைவனும் அவர்களுடன் வருவார்கள். அச்சமயம் தோஷத்தால் பாதிக்கப்பட்டு வரிசையில் பெற்றோர்களின் கையில் இருக்கும் குழந்தைகளின் முகத்தில் வேதத்தையோதி , மும்முறை சிரசு முதல் பாதம் வரை, வாயால் காற்றை ஊதி இறக்குவார்கள். 3 நாள் அதிகாலை கொண்டு செல்வார்கள். அக்குழந்தை 4வது நாள் பிணியிலிருந்து விடுபட்டு, ஆரோக்யத்துடனிருக்கும். இதைப் பார்த்த எமக்கு அக்கடவுள் மீதும் தனிபற்றுண்டு என்று சொல்வதில் பெருமையாக இருக்கு. இதில் தான் நம் சகோதரத்துவம் பின்னி பிணைந்துள்ளது. அது போன்ற குழந்தைகள் பிணியில் அகப்பட்டு அகால நேரத்தில் அவதியுறும் நேரத்தில், தர்க்காவிற்கு குழந்தையை கொண்டு செல்ல முடியாது, அச்சமயம் கீழ்வரும் சுபமந்திரத்தை, மும்முறை சொல்லி கையால் சிரசு முதல் பாதம் வரை தடவி, பூமியில் தட்டிவிட குழந்தை நிம்மதியாய் இருக்கும். 

சுபமந்திரம்

ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதிவந்த பூதமுகம் மதுதன்னருளின கல்லால் கனலால் சட்டையிட்டேன். வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும் படைக்கப்பட்ட. சின்ன சைத்தான்களும் பலவித தோஷங்கள் விலகிடவும், இனிவாராமல் காவல் செய்தேன். இரவும் பகலும் ஹதாவில் பள்ளி அகம்புகுந்து கொண்டோம். மக்காவின் ஆணை, ஈசு நபியாணை தரைக்குரு நபியாணை, சுலைமாண் நபியாணை,நாலு வேதத்தின் ஆணை, நாற்பத்தியீராயிரம் நஸாபியாணை, பலவித தோஷங்களும் பட்டுவிட வேண்டும்.மூன்று அல்லாயிடத்தும் இறல்லாவத்தும் அமன் அல்லா எட்டு திக்கும் பதினாறு கோணமும் டும்டும் ரீம்ரீம் மங்மங் அக்குலா குலா இல்லல்லாஹி சுலைமான் சொல். 

என்று மானதமாக சொல்லி குழந்தைகளுக்கு மந்திரிக்க வேண்டும். எம் பாட்டனார் சொல்லிக் கொடுத்தது. யாமுள் கையாண்டு வருகிறேன. பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு. வருமானத்தை எதிர்நோக்கி அல்ல. குழந்தையின் மீதுள்ள கருணை உள்ளமே.

Thursday 7 April 2016

இடா்களை களையும் இடும்பன் சுவாமி சுப மந்திரம்

" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை " 




கூப்பிட்டக்குரலுக்கு வரும் நம்மய்யன் முருகப்பெருமான் நம்மிடர்களைக் களைய நேரங்கள் கூடலாம், காரணம் நம்மைவிட மிகவும் தாழ்ந்தநிலையிலிருப்போரின் நிலைகளைக் கண்டு களைய சென்றிருப்பார். அதனால் அவரின் பாதுகாவலரான எமதய்யன் " இடும்பேஸ்வரன் " எமை சல்லியங்களிலிருந்தும், துர்தேவதைகளால் அவதியுற்றோரைக் காத்திடவும், யாம் கற்று பயனில் உள்ள சுபமந்திரமது. இது உரு கொடுக்க வேண்டியதில்ல. மும்முறை வாய்விட்டுச் சொன்னாலே போதும். பன்மடங்கு சக்தியைத் திரட்டி கதையால் தாக்குவார் துஷ்டசக்திகளை.

சுபமந்திரம்

சிங்காரமான திருமுடியழகும், முக அழகும், செஞ்சொல் வாய்மொழியழகும், காதுகளில் குண்டலமழகும், நெற்றியில் சிந்தூரப் பொட்டழகும், பாங்கான சதுர்ப்புஜங்களில் கைகள் அழகும், மார்பில் கவசவொளியினழகும், பூண்டிடு மிரத்தினப் பதக்கமும், திகழ் மார்பழகும், பொற்கையும் பீதாம்பரத்தினழகும், மங்காதப்பாதச் சிலம்பினழகும், வலியதண்டாயுத அழகுமய்யா, ஐம்பத்தோரட்சரமோதவே ஆடிவரும் பேய்கள் அபயமிட்டலறிப் பயந்தொடுங்கி ஓடிடவே திருத்தணி மலையினில் விளையாடும் மந்திர ஓங்கார சொரூபா வங்காள மலையாள கருப்பா இருளா அன்பர்கள் வணங்கிடும் குலசேகரா மகிமையுள்ள முருகரிடம் முன்பூசைக் கொண்டிடும் வீரவல்லிடும்ப சுவாமியே வந்தருள் புரிகுவாயய்யனே.

எவ்வாறு கடவுளை வணங்குவது?

" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை " 



மந்திரம் என்பது மோடி மஸ்தான் கண்கட்டு வித்தையல்ல. நம்மோட ஆழ்மனதில் உருவாகும் எண்ணங்களே மந்திரம். அஃது நற்சிந்தனைக் கொண்ட எண்ணங்களாக இருத்தால், சித்தியாகும். அதுவே சுயநலமாக இருந்தால் மோடி மஸ்தான் மந்திரம். ஆகவே ஆலயம் சென்று பகவானை வழிபடுவோர்கள் பகவானின் பாதத்தை உற்று நோக்கி கதறி அழுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் பகவானின் முகத்தைப் பார்த்து சேவிக்காதீர்கள். இதில் பல காரணங்கள் உண்டுங்க. அனுபவித்த சொல்லுங்க.

Wednesday 6 April 2016

ஜாதகத்தில் கேது பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்




   கேது பகவானுக்குரிய சுபமந்திரம் இராகு பகவானுக்கு குறிப்பிட்ட அத்தனை ஸ்தானங்களில் ஏதாவதொரு ஸ்தானங்களில் கேது பகவான் இருந்தாலும் அசுப பலனைத்தருவார். அவர் தரும் இடர்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் சாந்தம் பெற அவரை துதிக்கும் 

சுபமந்திரம்

ஓம் செந்தலைக்கேது பகவானே, செகம்புகழ் கேது பகவானே சஞ்சலங்களை யகற்றிட சடுதியில் வந்தருள் செய்குவாய் கேது பகவானே ஓம் வசிவசி வசிவசி சுவாஹா

ஜாதகத்தில் ராகு பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்




   ஒருவரது ஜாதகத்தில் 1வது ஸ்தானமாகிய கீர்த்தி மூர்த்தி, 2வது, ஸ்தானமாகிய குடும்ப சௌபாக்கியம், 3வது ஸ்தானமாகிய சகோதர நற்பூஷணம் 4வது,ஸ்தானமாகிய வாகனங் கல்வி. சுகசயனம். 5வது,ஸ்தானமாகிய மந்திரம், மாமன், சந்தானம். 7வது, ஸ்தானமாகிய விவாஹம்,போகம், மகிழ்ச்சி, யாத்திரை, 8வது ஸ்தானமாகிய தண்டனை, அவமதிப்பு, நோய். கண்டம், 9வது ஸ்தானமாகிய குருபக்தி, நிதி, வருமானம்.சந்தானம். 10வது ஸ்தானமாகிய தொழில் வியாபாரம், உத்யோகம், மெய்ஞானம். 12வது ஸ்தானமாகிய கவலை, சன்யாசம். மோக்ஷம் இந்த ஸ்தானங்களில் இராகு பகவான் அமர்ந்தால் துற்பலனையேத் தருவார். இதிலிருந்து ஓரளவு விடுபட்டு மனம் சாந்தம் பெற வேண்டி, அவரை துதிக்கும் அவருக்குண்டான

சுபமந்திரம்

ஓம் இராகுவே, உயர்தர இராகுவே, உலகிலே துயர்மிக உண்டாகச் செய்யும் பகவானே, கரும்பாம்பு ரூபமாய் கலங்கிடச் செய்த பகவானே கதியென யுனையே நினைந்து கழலடிப் பணிந்தேன் வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.

ஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்



   ஒருவரது ஜாதகத்தில் ஸ்ரீசனிபகவான் 6,12, இந்த இருஸ்தானங்கள் தவிர மற்றய ஸ்தானங்களுக்கு அதிபராகி, அனைத்தாய்வுகளிலும் பலம் இழந்தால், அந்த ஸ்தானங்களுக்குரிய அதிகாரங்கள் பலனில்லாமல் போய் விடும். அந்த அசுப பலன்களிலிருந்து ஓரளவு விடுபட்டு, பெருமூச்சுவிட்டு நிமிர்ந்து நடக்க. அவருக்குண்டான சுபமந்திரத்தை அனுதினமும் உச்சரித்துவர மனசாந்தமும் நிம்மதியும் தருவார் ஐயன் ஸ்ரீ சனீஸ்வர பகவான்.

சுபமந்திரம்

ஓம் நீலா, உச்சந்தி சுவாகா சௌயே, பங்கா, காரிருள் மந்தா, காக வாகனா, கதிர் மகனே என் சஞ்சலங்கள் தீர்த்திட சடுதியில் வந்திடுவாய் ஸ்ரீஓம் சனிபகவானே ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.

ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்



   ஒருவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் சுபஸ்தானங்களுக்குடையவராகி அனைத்தாய்வுகளிலும் பலமிழந்தால் சுபபலன் தவிர்த்து, அசுப பலனைத் தருவார். இந்த அசுப பலன் ஓரளவு குறைய அனுதினமும் அவருக்குண்டான சுபமந்திரத்தைச் செபித்துவர நன்மையைத் தரும். அதற்குண்டான சுபமந்திரம் 

சுபமந்திரம்

ஓம் அசுரமந்திரியே, அருட்ஜோதியே, பிரசுரா, பிரகுசல்லியபுயனே, சுங்கனே எம்மிடர்களை களைய சினமதைத் தவிர்த்து சீக்கிரம் வாவா 
ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.

ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்


   ஜாதகத்தில் குரு பகவான் அனைத்தாய்வு வகையிலும் பலமிழந்தால் அவருக்குண்டான அதிகாரப்பலன்கள் பலமிழக்கும், அப்பலமிழந்தப் பலன்கள் ஓரளவேனும் குறைய அவரை வழிபாட்டின்போது உச்சரிக்க வேண்டிய அவருக்குண்டான

சுபமந்திரம்

ஓம் குருவே, சுரகுருவே, சுந்தரப்பொன்குருவே, பிரகஸ்பதியெனுங் குருவே, அந்தணகுருவே, ஆதியந்தமான குருவே, பீதக்குருவே, எம்பிழைகளைப் பொருத்தருள் செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.

ஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்



  ஒருவரின் ஜாதகத்தில் வித்தைக்கதிபதியான புதபகவான் ஜாதகத்தில் சுபஸ்தானத்திற்குடையவராகி ஜாதக ரீதியான அனைத்தாய்வுகளிலும் பலமிழந்தால், அவருக்குண்டான ஸ்தானபலன் பலங்குறையும். பலவீனமானப் பலன்கள் குறைய கீழ்வரும் மந்திரத்தை அனுதினம் ஸ்நானம் செய்து முடித்து, பூஜை அறையிலமர்ந்து 108 முறை, மானதமாக ஜபித்தோமானால், நன்மையைத் தந்து வித்தையா அபிவிருத்தியைத் தரும். அவருக்குண்டான,

சுபமந்திரம்

ஓம் சௌமியா, பண்டிதா, மதிமகாமாலா, அனுவரிகணக்கா, புந்தியேபாகா, புதனே புகழ்பெற எனைக்காத்திட வருவாய் ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.

Tuesday 5 April 2016

ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்


  ஜாதகத்தில் அங்காரக பகவான் சுபஸ்தானங்களுக்கு உடையவராய, இவர் பெற்ற நட்சத்திராதிபனும் சுபஸ்தானங்களுக்கு உடையவராயுமிருந்து, பலமிழந்திருந்தால், அங்காரக பகவானின் ஸ்தான அதிகாரமும் நட்சத்திராபனின் ஸ்தான அதிகாரத்தின் பலனும் பலமிருக்காது. மேற்கண்ட வகைகளில் தரும் அசுப பலன்கள் குறைய அவருக்கான,


சுபமந்திரம்

ஓம் அங்காரகா மங்களா பூமகா! வக்கிரா நிலமகா குருதிசேயா! ஆரலா குசனே செந்தீவண்ணனே! அடியேன் குறைகளை அகற்றிட அதிவிரைவிலே வாவா! ஓம் வசிவசி வசிவசி சுவாஹ!

Monday 4 April 2016

ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை
ஏணையோருக்கும் பற்றுடன் காலை வணக்கம்



ஜாதகத்தில் சந்திர பகவான் சுபஸ்தானங்களாகிய (1,2,4,5,7,8,9,10.11) பலமிழந்தால், அவரது தசா புக்தி அந்தரக்காலங்களில் அசுப பலன்களைத் தருவார். அந்த அசுப பலன்கள் குறைய கீழ்வரும் மந்திரத்தை அனுதினம் ஸ்நானம் முடித்து, பூஜை அறையில் விநாயகப்பெருமானை த்யானஞ் செய்து பின்

சுபமந்திரம்

ஓம் பிறைமதி குபேரா ! பித்தனின் சடையில் பிறந்தெழுந்தாய் ! இந்துவே சோகா இமகரா ! அம்புலி இராக்கதிர் வியோபா ! நிலவுஞ்சதிரா சுடர்கலையோனே சுதனே ! மனக்கவலை அகல சீக்கிரம் பளிங்கென வருவாய் ! ஓம் வசிவசி வசிவசி சுவாஹ 

என்று இம்மந்திரத்தை மானதமாக உச்சாிக்க வேண்டும்.

Sunday 3 April 2016

ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய

" ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை " 

ஏனையோருக்கும் அன்புடன் ஆதிவாரக் காலை வணக்கம்.




ஒருவருடைய ஜாதகத்தில் அறிவைப்பெருக்கிக் கல்வியும் புகழையும் தந்து, குடும்பமுமுருவாக்கி பராக்கிரமமாய் குலதெய்வ அனுகிரகத்துடன் திருமண வைபவங்கள் தந்து (தரக்கூடிய) ஆயுளாரோக்யத்துடன் லாபங்களுடன் பாக்கியத்தைத் தரக்கூடிய சூரியபகவானும். இவருக்கு சக்தியைத்தரக்கூடிய நட்சத்திரதிபதிகளும் பலமிழந்தால். அவர் தரும் கெடுபலன்கள் குறைய அனுதினம் ஸ்நானம் முடித்து, காலை 6மணி முதல் 7க்குள் அவராட்சி ஓரையில் தரிசனங்கண்டு ஊதுவத்தியேற்றி தூப ஆராதனை செய்து கீழ்வரும் சுபமந்திரத்தை முடிந்த எண்ணிக்கையில் உச்சரித்தால் கெடுபலன்கள் குறைந்து. மனம் சாந்தம் பெறும். 


சுபமந்திரம்

ஓம் ஆதவா, ஆயிரங்கதிரவா, அருணா, 
அலரி பாணுவே, அழலா, திவாகரா, 
ரவிதினகரா, பரிதியே, செங்கதிரவா 
அடியேனுக்கேற்பட்ட தீவினை அகற்றிட 
அருள்செய்ய வாவா ஓம் வசிவசி வசிவசி சுவாஹ.

அனைத்தையும் பெற கணபதி மந்திரம்

ஸ்ரீபொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை

அனைத்தையும் பெற கணபதி மந்திரம்




சுபமந்திரம்

ஓம் கணபதி, அழகு கணபதி, சக்தி கணபதி, 
மஹா கணபதி, வித்தைகள் விளக்கிய கணபதி, பரிபூரண கணபதி, 
கச்சிக் கணபதி, என்னிருளினைப் போக்க சடுதியில் வாவா 
ஒம் ஐயுங் கிலியும் சௌவும் றீயுமென் றுன்றிருவடி சரணங்கணபதி.